இலங்கையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியர்கள் கைது!

முல்லைத்தீவு – அலம்பில் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நடவடிக்கை நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. கிழக்கு கடற்படை கட்டளையின் படி, இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய இழுவை படகுகளை விரட்டுவதற்கான சிறப்பு நடவடிக்கையொன்று இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை இந்நிலையில், அலம்பில் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது இந்திய இழுவை படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. … Continue reading இலங்கையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியர்கள் கைது!